தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்:"எந்த ஒரு அணுகுமுறையும் நேர்மையானதாக இருக்க வேண்டும்"-இந்தியா வலியுறுத்தல்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரத்தில் எந்த ஒரு அணுகுமுறையும் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (Image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

புதுடெல்லி:ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமான, நிரந்தரம் அல்லாத பிரிவுகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உரையாற்றிய வெளிறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,"பன்முக மேம்பாட்டு வங்கிகளின் நடைமுறைகள் மிகவும் காலம் கடந்த ஒன்றாக இருக்கின்றன. எனவே அவை இப்போதைய சூழலுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட வேண்டும்.இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிலும் இது குறித்து வலியுறுத்தப்பட்டது. பிரேசில் இந்த பணியை முன்னெடுக்க வேண்டும்.

உலகளாவிய தெற்கில் பிரிக்ஸ் நாடுகள் வித்தியாசத்தை உருவாக்க முடியும். படைகள் நவீனமயமாக மாற்றப்பட வேண்டும். காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகள் தங்களின் வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்துள்ளன. புதிய திறன்கள் வெளிப்பட்டன,மேலும் திறமைகளைப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. இந்த பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார மறுசீரமைப்பு இப்போது உண்மையான பல துருவங்களை நாம் சிந்திக்கக்கூடிய ஒரு புள்ளியை எட்டியுள்ளது.பிரிக்ஸ் நாடுகள் பழைய ஒழுங்கை எவ்வளவு ஆழமாக மாற்றுகிறது என்பதற்கான சான்றாகும்

அதே நேரத்தில் பழைய காலத்தின் பல்வேறு சமநிலையற்ற தன்மைகள் தொடர்கின்றன. எனினும், அவை புதிய வடிவில் புதிய வெளிப்பாடுகளை பெற்றுள்ளன. அபிவிருத்தி வளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் மற்றும் திறன்களை அணுகுவதில் நாம் அதைக் காண்கிறோம்.

கருத்து வேறுபாடுகள்,முரண்பாடுகள் பேச்சுவார்த்தை மூலமும் தூதரக வாயிலாகவும் தீர்க்கப்பட வேண்டும்.இது போருக்கான யுகம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கு ஆசியா நமக்கானது. இது புரிந்து கொள்ளக்கூடிய கவலையாகும். இந்த பிராந்தியத்தில் போர் மேலும் பரவுமோ என்ற பரவலான அச்சம் இருக்கிறது. கடல் வழி வணிகம் மிக ஆழமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. மனிதர்கள், பொருட்கள் இழப்பு மேலும் அதிகரித்திருப்பது உண்மையில் தீவிரமான ஒன்று. எந்த ஒரு அணுகுமுறையும் நேர்மையானதாக ஏற்றதாக, பாலஸ்தீன தனி நாடு உருவாக்குதல் என்பதை நோக்கி இருக்க வேண்டும்,"என்று குறிப்பிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Image credits-ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details