தமிழ்நாடு

tamil nadu

90 சதவீதம் லாபம் பெறும் நடிகர்கள் ஏன் புரோமஷனுக்கு வருவதில்லை? ஆர்.கே.செல்வமணி விளாசல்! - RK Selvamani About movie promotion

By ETV Bharat Entertainment Team

Published : Jul 27, 2024, 4:15 PM IST

R.K.Selvamani About Movie Promotion: எமக்குத் தொழில் Romance படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பட புரமோஷனுக்கு நடிகர்கள் ஒத்துழைக்காவிட்டால் இனிமேல் அவர்களை வைத்து படம் பண்ண மாட்டோம் என்று முடிவு செய்யுங்கள் என தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா நடித்துள்ள எமக்குத் தொழில் Romance படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூலை 27) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கே.ராஜன், டி.சிவா, எழில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ”டெலிவரியை போல ஒவ்வொரு படமும் வெளிவருவது ரொம்ப கஷ்டம். ஒரு படத்தை தயாரிப்பது உண்மையில் கஷ்டம் தான். ஆனால், அதை திறம்படச் செய்தால் அந்த கஷ்டம் இருக்காது. ட்ரெய்லர் பார்க்கும் போது நன்றாக இருந்தது.

என் படமும் ரிலீஸ் ஆகும் போது ரொம்ப பாராட்டினாங்க. அதுக்கு முன்னாடி அவ்வளவு பேசுனாங்க. சினிமாவில் எதுவும் நடக்கும். அசோக் செல்வனும் ரொம்ப நாகரிகமான, பண்பான மனிதர் தான். ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் படத்தின் ரிலீஸுக்கு வர வேண்டும் என்றார்.

மேலும், படத்தின் வெற்றிக்கு ஹீரோ, ஹீரோயினுக்கு 80 சதவிகிதம் லாபம். ஆனால் தயாரிப்பாளர், இயக்குநர் நிலைமை அதே மாதிரி தான் இருக்கும். 5 முதல் 10 சதவீதம் லாபம் பெறும் தயாரிப்பாளர் புரமோஷனுக்கு ஒர்க் பண்ணும் போது 90 சதவீதம் வரை லாபம் பெறும் நடிகர்கள் ஏன் அதை செய்வதில்லை?

இன்றைக்கு சிறிய படங்களுக்கு யாரும் கடன் கொடுக்க தயாராக இல்லை. தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து சரியான வழிமுறைகளைக் கொண்டு வந்தால் தேவையில்லாத பிரச்னை வராமல் இருக்கும்.‌ இதை பின்பற்றினால் 60 முதல் 80 சதவீதம் தமிழ் சினிமா மாறுபடும். வருமானம் வரும்.‌

நான் வாங்கிய பாடலை ஒரு மேடையில் நான் பயன்படுத்த பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பல வழிகளில் வருமானம் வருகிறது. ஆனால், தயாரிப்பாளருக்கு வருமானம் இல்லை. வருமானம் வரும் வழிகளைக் கண்டறிந்து அதன்படி திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கத்திற்காக மட்டும் நான் பேசவில்லை. தமிழ் சினிமாவுக்காக பேசுகிறேன். இது ஒரு வீடு. மொத்த தமிழ் சினிமாவும் இணைந்து செயல்பட்டால் இந்த வீட்டில் இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் நன்றாக இருக்கலாம்.

பட புரமோஷனுக்கு நடிகர்கள் ஒத்துழைக்காவிட்டால் இனிமேல் அவர்களை வைத்து படத்தை பண்ண மாட்டோம் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். உங்கள் முயற்சிக்கு ஃபெப்சி சம்மேளனம் துணையாக இருக்கும். தயாரிப்பு துறை நன்றாக இருந்தால் தான் திரையுலகம் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறினாரா ஜான் விஜய்? சின்மயி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு! - chinmayi accuses john vijay

ABOUT THE AUTHOR

...view details