ஹைதராபாத்:பொதுவாகக் கோடைக் காலத்தில்தான் வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்படும் ஆனால் இந்தாண்டு கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலில் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நாட்டில் தமிழகம், மேற்குவங்கம், பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும், என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது," நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிக மோசமான வெப்ப நிலை நீடிக்கும். குறிப்பாக மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்க்கண்டில் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மே 1ஆம் தேதி வரை கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்றும், அதன்பிறகு, மே 2ஆம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மோசமானது முதல் மிக மோசமான வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடகம், ஆந்திர மற்றும் கோவா, ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் இன்று முதல் மே 1ஆம் தேதி வரையும், கேரளத்தின் கொங்கன் பகுதிகளில் இன்றும் வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.