தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இமாச்சல பிரதேச மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! - Lok sabha Election 2024

இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 மக்களவை தொகுதிகள் மற்றும் இடைத் தேர்தல் நடைபெறும் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 4:33 PM IST

Etv Bharat
Representative Image ((ANI))

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 4 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து 6 சட்டமன்றங்களுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று (மே.7) முதல் மே 14ஆம் தேதி வரை இடைத் தேர்தல் நடைபெறும் 6 சட்டமன்றங்கள் மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்குகின்றன.

மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மே 14ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 15ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், மே 17 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். இதில் பொது விடுமுறை காரணமாக மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 மக்களவை தொகுதிகள் மற்றும் 6 சட்டமன்றங்களுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் கங்ரா, மண்டி, ஹமிர்பூர், சிம்லா ஆகிய 4 மக்களவை தொகுதிகளுக்கும், அண்மையில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் \ இடைநீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் கட்சி மாறி வாக்களித்தனர். இதில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து, 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது அந்த 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?: உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன? - Delhi Excise Policy Case

ABOUT THE AUTHOR

...view details