தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரவிந்த் கெஜ்ரிவால் காவல் மீண்டும் நீட்டிப்பு! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு! - Delhi excise policy case - DELHI EXCISE POLICY CASE

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை ஏப்ரல் 29ஆம் தேதி வரை நீடித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 4:04 PM IST

டெல்லி:மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்ட நிலையில், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத்துறையின் காவலை எதிர்த்து இடைக்கால நிவாரணம் கோரி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் 27ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததை சட்ட விரோதம் எனக் கூற முடியாது என கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்கக் கோரியும், அதுவரைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என்றும் கூறி உத்தரவிட்டனர். இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் இன்றுடன் (ஏப்.15) நிறைவடைகிறது.

திகார் சிறையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டர். இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீதிபதி நீடித்து உத்தரவிட்டார். முறைகேடு வழக்கில் விசாரணை அமைப்பின் கைதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்த அன்றே அவரது காவல் நீடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவின் மகள் மற்றும் எம்எல்சி கவிதாவின் நீதிமன்ற காவலும் ஏப்ரல் 23ஆம் தேதி முடிவடைவது குறிப்பிடத்தக்கது. அவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுப்பு! அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! - Delhi Liquor Scam

ABOUT THE AUTHOR

...view details