பூலாம்பாடி தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15752113-thumbnail-3x2-ppr.jpg)
பெரம்பலூர்: பூலாம்பாடி அருள்மிகு தர்மராஜர் திரெளபதி அம்மன் திருக்கோயிலில் இன்று (ஜூலை6) நடந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த 4ஆம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகளோடு தொடங்கிய கும்பாபிஷேகத்தின் ஒரு பகுதியாக, இன்று இராஜகோபுர விமானம், மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.