தரைப்பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம் - மக்களுக்கு எச்சரிக்கை!

By

Published : Nov 2, 2021, 6:17 PM IST

thumbnail
ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சித்தூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திறந்துவிடப்பட்ட நீர் திருவள்ளூர் மாவட்ட எல்லையை வந்தடைந்த நிலையில், தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவாய்ப்புள்ளதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளியகரம், நெடியம், சாமந்தவாடா, சொரக்கா பேட்டை தரைப்பாலத்திற்கு மேல் நீர் செல்வதால் பாலத்தை கடக்க முயலவேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.