thumbnail

By

Published : Jun 19, 2022, 4:43 PM IST

ETV Bharat / Videos

Video: கொட்டும் மழையில் வாழ்வாதாரத்திற்காக பாட்டிலை சேகரித்துக்கொண்டு சென்ற மூதாட்டி

திருவாரூர்: நன்னிலம் மற்றும் அதன் சுற்றுக்கிராமப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரமாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், நன்னிலம் அருகே திருவாரூர் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபந்தல் என்ற பகுதியில் கொட்டும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் 65 வயதுடைய மூதாட்டி வயிற்றுப்பிழைப்புக்காக பாட்டில், அட்டை, வீணான காகிதங்கள் போன்றவற்றை ஒரு கோணிப்பையில் வைத்து தள்ளாடியபடி இழுத்துச்செல்லும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.