அம்மா வழியில் நல்லாட்சி- கோலத்தை கண்டதும் கடுப்பான தாசில்தார்
கன்னியாகுமரி மாவட்டம் முக்கடல் சங்கம பகுதியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி சட்டபேரவை தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் குழுவாக பங்கேற்று முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியுடன் வண்ண கோலங்கள் போட்டனர்.
இதில் வெற்றி பெறும் குழுவுக்கு தேசிய வாக்காளர் தினத்தன்று நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படும். இந்தக் கோலப் போட்டியில் சுய உதவிக் குழு சார்பில் "வெற்றி நடைபோடும் தமிழகம்", "அம்மா வழியில் நல்லாட்சி" என்ற வாசகங்கள் அடங்கிய கோலம் போடப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த தாசில்தார் சுசீலா மற்றும் இப்ராகிம் ஆகியோர் உடனடியாக அந்த கோலத்தை அழிக்க வலியுறுத்தினர். ஆனால் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஆனால் கோலத்தை அழித்தே ஆகவேண்டும் என சுசீலா தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால் வேறுவழியின்றி அந்த கோலத்தை பெண்கள் அளித்தனர்.