ட்ரோன் கேமராவை கல்வீசி தாக்க முயன்ற இளைஞர் - உறுதிமொழி ஏற்க வைத்த காவலர்கள்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி காவல் துறையினர் ட்ரோன் மூலம் ஊரடங்கை கண்காணித்தனர். அப்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை ட்ரோன் கேமராவில் பதிவுசெய்தனர். அதில் ஒரு இளைஞர் கேமராவை கல்வீசி தாக்க முயற்சித்தார். இதனையடுத்து கிரிக்கெட் விளையாடிய பத்துக்கும் மேற்பட்டவர்களை காவல் நிலையம் அழைத்துவந்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ’கிரிக்கெட் விளையாட மாட்டோம்’ என இளைஞர்களை உறுதிமொழி எடுக்கவைத்தனர்.