கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பெய்துவரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நகரப் பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதுபோல், மலையோரப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன.