நூறு விழுக்காடு வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!
திருவள்ளூர் மாவட்டத்தில் மீன்வளத் துறை, டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி பழவேற்காடு நுழைவு வாயிலில் இருந்து மீன்வளத்துறை அலுவலகம்வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவியர்கள் பதாகைகளை ஏந்தி, வண்ண பலூன்களை பறக்கவிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.