குற்றாலம் அருவிகளில் கோடை மழை : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி - குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு ஏற்ற சீசன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14986986-thumbnail-3x2-ku.jpg)
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதமும் சீசன் காலங்களாகும். இதனிடையே, குற்றாலம் பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் கடந்த ஒரு மாத காலமாக நீர் வரத்து முழுமையாக நின்ற நிலையில் அனைத்து அருவிகளும் வறண்டு காணப்பட்டன. இதனால் குளிப்பதற்காக வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாகத் தென்காசி மாவட்டத்தில் கோடைமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு ஏற்ற வகையில் நீர் வரத் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
TAGGED:
சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி