thumbnail

By

Published : Jun 28, 2023, 1:06 PM IST

ETV Bharat / Videos

ரூ.3 கோடியைத் தாண்டிய பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இதனிடையே கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதால் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. 

இந்த நிலையில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் நிறைந்த பின்பு உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் ரொக்கமாக 3 கோடியே 5 லட்சத்து 76 ஆயிரத்து 584 ரூபாய் கிடைத்துள்ளது. 

மேலும் தங்கம் 877 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 273 கிராமும், வெளிநாட்டு கரன்சி 472 நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது. இது 13 நாட்களில் கிடைத்த வருவாய் ஆகும். உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக் காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 

உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரி பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கிப் பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.