கனமழையில் முறிந்து விழுந்த 100கும் மேற்பட்ட மரங்கள்....
திருவள்ளூர் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில் 100கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. சாலை ஓரமாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அனைத்தும் சாலையில் சாய்ந்தது. இதனால், சுமார் 5 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது, திருவள்ளூர் நகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றி வருகின்றனர். திருவள்ளூர் 6 செ.மீ, பூந்தமல்லி - 4 செமீ, ஜமீன் கொரட்டூர், பள்ளிப்பட்டு தலா - 3 செமீ, பூண்டி, ஆவடி தலா - 2 செமீ மழை பதிவானது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST