காலமான துறவி அறையில் கட்டுக் கட்டாக பணம்! - Monk Death
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15472440-thumbnail-3x2-saint.jpg)
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள கரப்பா மண்டல் வேளங்கியில் ராமகிருஷ்ணா என்ற துறவி கடந்த வியாழக்கிழமை (ஜூன்2) திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வந்த காவல்துறையினர், அறையில் இருந்த இரண்டு பைகளில் பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், காவல்துறை முன்னிலையில் வருவாய்த்துறையினர் அறையிலிருந்த ரூ.3,39,500-ஐ கைப்பற்றினர். இது காவல்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST