சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை ஸ்ரீ பதஞ்சலி யோகா மையம் சார்பில் நடைபெற்ற யோகா பயிற்சியில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சர்வங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம், பிரணாயாமம், தியானம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சியில் ஈடுபட்டனர். 40 ஆண்டுகளாக யோகா சேவையை வழங்கி வரும் பயிற்சி மையத்தின் குரு டி.எஸ்ஆர்.கணேசனுக்கு யோகபூஷன் என்ற விருதை மாணவர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.