Elivaal Falls: எலிவால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்... ஆர்வத்துடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்! - theni news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21-09-2023/640-480-19567997-thumbnail-16x9-tni.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Sep 21, 2023, 12:30 PM IST
தேனி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக எலிவால் அருவியில், நீர் ஆர்பரித்து கொட்டுவதை சுற்றுலாப் பயணியர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை இல்லாத நிலையில், மஞ்சளாறு அணைக்கு மேல் பகுதியில் உள்ள எலிவால் அருவிக்கு முற்றிலும் நீர் வரத்து இல்லாமல் காணப்பட்டது. இதனால் கொடைக்கானல் சுற்றுலா செல்லும் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள் மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக அருவிக்கு நீர் வரத்து aதிகரித்து வங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள அருவிகளில் மிகவும் உயரமான அருவியும், இந்தியாவில் 6வது உயரமான அருவியுமான எலிவால் அருவியில் நீர் ஆர்பரித்து கொட்டி வருவதை கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.