thumbnail

By

Published : Aug 4, 2023, 2:24 PM IST

ETV Bharat / Videos

15 ஆண்டுகளைக் கடந்த 'சுப்பிரமணியபுரம்' - திரையரங்கில் ரீ ரிலிஸ்!

சென்னை: சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சுப்பிரமணியபுரம். இப்படத்தில் சசிகுமார், ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மதுரை மண்ணின் வாசத்துடன், பழிவாங்கும் கதையாக உருவான அப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. 

திரையரங்கில் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்ற இப்படம் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் உருவான 'கண்கள் இரண்டால்... உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்' என்ற பாடலால் மீண்டும் பிக்கப் ஆகி வெற்றிவிழா கொண்டாடியது. இந்த நிலையில் சுப்பிரமணியபுரம் திரைப்படம் வெளியாகி தற்போது 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. 

இதனையொட்டி சுப்பிரமணியபுரம் திரைப்படம் திரையரங்குகளில் இன்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. தற்போது சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் தனது ரசிகர்கள் உடன் இயக்குனர் சசிகுமார், சமுத்திரக்கனி, ஜெய், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் படம் பார்த்து ரசித்தனர். மேலும் படத்தின் இறுதியில் 15வது நிறைவு விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.