ETV Bharat / state

சுடசுட ராகி களி, ரொட்டியை யானைகளுக்குப் படையலிட்ட கிராம மக்கள்! - KADAMBUR ELEPHANT FEAST

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த அணில் நத்தம் கிராமத்தில் யானைகளுக்கு விவசாய பயிர்களை யானைகள் சேதப்படுத்தாமல் இருக்கக் கிராம மக்கள் நேர்த்திக்கடனாக ராகி ரொட்டி, ராகி களி சமைத்து படையலிட்டு வழிபட்டனர்.

யானைகளுக்கு விருந்து தயாரிக்கும் மக்கள்
யானைகளுக்கு விருந்து தயாரிக்கும் மக்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2025, 3:27 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைக்கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த மானாவாரி நிலங்களில் ராகி, சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்த பழங்குடியின மக்கள் ராகி, திணை பயிர்களை உணவாக எடுத்துக் கொள்வதால் ஆண்டு முழுவதும் உணவுக்கு ராகி பயிரை நம்பியுள்ளனர்.

இந்நிலையில், மானாவாரி விவசாயத்தை நம்பி வாழும் பழங்குயிடின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் அபாயம் இந்த பகுதியில் தொடர்கதையாக உள்ளது. இதனால், ஆண்டு முழுவதும் உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், மாட்டுப்பொங்கலைத் தொடர்ந்தும் மாடுகளைக் குளிப்பாட்டி, கால்நடைகளுக்குச் சிறப்புப் பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.

இவ்வாறு, ஊருக்குள் புகும் யானைகள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள ராகிப் பயிர்களைத் துவம்சம் செய்வதால் பழங்குடியினர் உணவு தேவையில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் மானாவாரி விவசாயத்தை யானைகள் தொல்லை செய்யக் கூடாது என்பதற்காகக் கிராம மக்கள் நேர்த்திக்கடனாக யானைகளுக்குச் சிறப்புப் படையல் வைத்து வழிபட்டனர்.

யானைகளுக்கு விருந்து தயாரிக்கும் மக்கள் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: நீலகியில் குப்பையில் வீசப்பட்ட மது பாட்டிலை எடுத்து குடிக்க முயன்ற குட்டி யானை! வைரல் வீடியோ!

அந்த சிறப்புப் படையலில் யானைகளுக்குப் பிடித்த ராகி களி, ராகி ரொட்டியை கிராம மக்கள் தங்களது கையால், வனத்திற்கு சென்று சமைத்துப் அங்கு வைத்து விடுவார்கள். அதை யானைகள் வந்து சாப்பிட்டு விட்டுச் செல்லும். இதன்படி யானைகள் ராகிப்பயிர்களை சேதம் செய்ய வராது என்பது அப் பகுதி பழங்குடியின மக்களின் நம்பிக்கை.

இந்நிலையில், இந்தாண்டுக்கான விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 19ஆம் தேதி அணில் நத்தம் கிராமத்தில் தொடங்கியது. பாரம்பரிய இசை முழங்க பாடல், ஆடல் என கொண்டாட்டமாக விழா நடைபெற்றது. முதலில் கிராம மக்கள் அங்குள்ள கிராம கோயிலில் உள்ள நடுகல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியாக ராகி ரொட்டி, ராகி களி சமைத்து யானைகளுக்குப் படையலிட்டு வணங்கினர். இதனால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைக்கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த மானாவாரி நிலங்களில் ராகி, சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்த பழங்குடியின மக்கள் ராகி, திணை பயிர்களை உணவாக எடுத்துக் கொள்வதால் ஆண்டு முழுவதும் உணவுக்கு ராகி பயிரை நம்பியுள்ளனர்.

இந்நிலையில், மானாவாரி விவசாயத்தை நம்பி வாழும் பழங்குயிடின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் அபாயம் இந்த பகுதியில் தொடர்கதையாக உள்ளது. இதனால், ஆண்டு முழுவதும் உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், மாட்டுப்பொங்கலைத் தொடர்ந்தும் மாடுகளைக் குளிப்பாட்டி, கால்நடைகளுக்குச் சிறப்புப் பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.

இவ்வாறு, ஊருக்குள் புகும் யானைகள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள ராகிப் பயிர்களைத் துவம்சம் செய்வதால் பழங்குடியினர் உணவு தேவையில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் மானாவாரி விவசாயத்தை யானைகள் தொல்லை செய்யக் கூடாது என்பதற்காகக் கிராம மக்கள் நேர்த்திக்கடனாக யானைகளுக்குச் சிறப்புப் படையல் வைத்து வழிபட்டனர்.

யானைகளுக்கு விருந்து தயாரிக்கும் மக்கள் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: நீலகியில் குப்பையில் வீசப்பட்ட மது பாட்டிலை எடுத்து குடிக்க முயன்ற குட்டி யானை! வைரல் வீடியோ!

அந்த சிறப்புப் படையலில் யானைகளுக்குப் பிடித்த ராகி களி, ராகி ரொட்டியை கிராம மக்கள் தங்களது கையால், வனத்திற்கு சென்று சமைத்துப் அங்கு வைத்து விடுவார்கள். அதை யானைகள் வந்து சாப்பிட்டு விட்டுச் செல்லும். இதன்படி யானைகள் ராகிப்பயிர்களை சேதம் செய்ய வராது என்பது அப் பகுதி பழங்குடியின மக்களின் நம்பிக்கை.

இந்நிலையில், இந்தாண்டுக்கான விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 19ஆம் தேதி அணில் நத்தம் கிராமத்தில் தொடங்கியது. பாரம்பரிய இசை முழங்க பாடல், ஆடல் என கொண்டாட்டமாக விழா நடைபெற்றது. முதலில் கிராம மக்கள் அங்குள்ள கிராம கோயிலில் உள்ள நடுகல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியாக ராகி ரொட்டி, ராகி களி சமைத்து யானைகளுக்குப் படையலிட்டு வணங்கினர். இதனால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.