அண்ணாமலையார் கோயிலில் நந்தி சிலைக்கு சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி சிலைக்கு மாசிமாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பால், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, சந்தனம், வாசனை திரவியங்கள் ஆகியன கொண்டு நந்தி சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் பலர் அமர்ந்து சிவனை நோக்கி மெய்யுருகி பாடல்கள் பாடி வணங்கி வழிபட்டனர்.