உதகையில் குட்டிகளுடன் புலி உலா வருவதாக பரவும் போலி வீடியோ - Fake video of tiger Roaming
Published : 3 hours ago
நீலகிரி: உதகை பகுதியில் இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கோத்தகிரி சாலையில் உள்ள தொட்டபெட்டா பகுதியில் குட்டிகளுடன் புலி உலா வருவதாக நேற்று இரவு முதல் சமூக வலைத்தளங்களை வீடியோ ஒன்று பரவி வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் கௌதம் உதகையில் குட்டிகளுடன் புலி உலா வருவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ தவறானது என நீலகிரி மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
அதில் உதகை தொட்டபெட்டா பகுதியில் குட்டிகளுடன் உலா வரும் புலியின் வீடியோ, இரண்டு வருடத்திற்கு முன்பு வட மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதில் இந்த வீடியோவை உதகை தொட்டபெட்டா பகுதி எனக்கூறி சமூக வலைத்தளங்களில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குற்றவியல் வழக்கு தொடரப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.