ETV Bharat / state

பணியில் இல்லாதவர்களுக்கு சம்பளம்.. ரூ.7.81 கோடி மோசடி செய்த இருவர் கைது! - Co Operative Money Laundering

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி 7 கோடியே 81 லட்சத்து 452 ரூபாய் பணத்தை உறுப்பினர்களின் பெயரில் மோசடி செய்த நகர கூட்டுறவு சங்கச் செயலாளர் மற்றும் எழுத்தர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 1 hours ago

கைதான சங்கர் மற்றும் பாரதி
கைதான சங்கர் மற்றும் பாரதி (Credit - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் பகுதியில் வி.எல். 81 நகர கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து கூட்டுறவு தணிக்கை துறையினர் கடந்த ஆண்டு தணிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, பல்வேறு முறைகேடுகள் வெளியே வந்துள்ளது. அந்த வகையில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்களை பணியில் இருப்பதாக கூறி மாத மாதம் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக கணக்கு காட்டப்பட்டு அந்த பணத்தை எடுத்துள்ளனர்.

அதேபோல, 2021ஆம் அண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில் கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்றது, போலியான ஆவணங்களை வைத்து கடன்பெற வழிவகை செய்தது, வைப்பு நிதியை கையாடல் செய்தது, சங்க செலவினங்களை அதிகப்படுத்தி போலியாக கணக்கு எழுதியது என பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போலி ஆவணங்கள் மற்றும் கணக்கு காட்டுதல் மூலமாக மொத்தம் 7 கோடியே 81 லட்சத்து 452 ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுமட்டும் அல்லாது, இந்த மோசடியில் தென்கடப்பந்தாங்கல் நகர கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் எழுத்தர் பாரதி ஆகியோர் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிகாரி அறைக்கு பூட்டு.. தாம்பரம் மண்டலக் குழு தலைவர் கைது!

இதன் தொடர்ச்சியாக, நகர கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மற்றும் எழுத்தர் இருவரையும் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இது தொடர்பாக நகர கூட்டுறவு சங்க தலைவர் சுவேதா, வேலூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், கடந்த 01ஆம் தேதி அன்று வழக்குப் பதிவு செய்த வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் மோசடியில் ஈடுபட்ட சங்க செயலாளர் சங்கர் மற்றும் எழுத்தாளர் பாரதி ஆகிய இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் பகுதியில் வி.எல். 81 நகர கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து கூட்டுறவு தணிக்கை துறையினர் கடந்த ஆண்டு தணிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, பல்வேறு முறைகேடுகள் வெளியே வந்துள்ளது. அந்த வகையில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்களை பணியில் இருப்பதாக கூறி மாத மாதம் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக கணக்கு காட்டப்பட்டு அந்த பணத்தை எடுத்துள்ளனர்.

அதேபோல, 2021ஆம் அண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில் கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்றது, போலியான ஆவணங்களை வைத்து கடன்பெற வழிவகை செய்தது, வைப்பு நிதியை கையாடல் செய்தது, சங்க செலவினங்களை அதிகப்படுத்தி போலியாக கணக்கு எழுதியது என பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போலி ஆவணங்கள் மற்றும் கணக்கு காட்டுதல் மூலமாக மொத்தம் 7 கோடியே 81 லட்சத்து 452 ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுமட்டும் அல்லாது, இந்த மோசடியில் தென்கடப்பந்தாங்கல் நகர கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் எழுத்தர் பாரதி ஆகியோர் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிகாரி அறைக்கு பூட்டு.. தாம்பரம் மண்டலக் குழு தலைவர் கைது!

இதன் தொடர்ச்சியாக, நகர கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மற்றும் எழுத்தர் இருவரையும் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இது தொடர்பாக நகர கூட்டுறவு சங்க தலைவர் சுவேதா, வேலூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், கடந்த 01ஆம் தேதி அன்று வழக்குப் பதிவு செய்த வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் மோசடியில் ஈடுபட்ட சங்க செயலாளர் சங்கர் மற்றும் எழுத்தாளர் பாரதி ஆகிய இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.