ராய்ப்பூரைச் சேர்ந்த பெண் 28 மணி 25 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரங்களை ஓதி சாதனை
அருணா பெரி (55) ஆசிரியராகப் பணிபுரியும் இவர், லலிதா சாஸ்திர மந்திரங்களை 28 மணி 25 நிமிடங்கள் தொடர்ந்து ஓதியதின் மூலம் 'கோல்டன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' பட்டத்தை வென்றுள்ளார். இவர் பிப்ரவரி 27 காலை 10.45 மணியளவில் தொடங்கி மறுநாள் (பிப். 28) வரை தொடர்ந்து மந்திரங்களை ஓதி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 24 மணிநேரம் தொடர்ந்து மந்திரங்களை ஓதியது தான் சாதனையாக இருந்தது.