சூரத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஜான்வி வேகாரியா ராமாயணத்தால் ஈர்க்கப்பட்டு, ராமாயணத்தின் 15 முக்கிய நிகழ்வுகளை 101 அடி ஓவியமாக வரைந்துள்ளார். இதற்காக கேன்வாஸ் துணி, இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளார். இதில், ராமனின் பிறப்பு முதல் ராவணன் உடனான போர் வரையிலான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.