வீடுதேடி உணவளிக்கும் சகாயா!
மாநிலத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது மக்கள் பெரிதும் துன்பத்திற்குள்ளானார்கள். வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்கள் பட்டினியால் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அரசு ஏதேனும் உதவி செய்யாதா என எதிர்நோக்கினர். இம்மக்களுக்கு உதவும் வகையில் கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் சகாயா. இவர்கள் உதவி தேவைப்படும் மக்களின் வீட்டிற்கே சென்று உணவு வழங்குகின்றனர்.