இது தொடர்பாக விருதுநகாில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த பெருமை. முதன்மை மாநிலம் என்ற அந்தஸ்து வழங்கியதில் மத்திய அரசின் தலையீடு இல்லை, சிறந்த மாநில அந்தஸ்து பெற்றதை கேலி பேசுபவர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆட்சி மீது வஞ்சம் வைத்திருப்பவர்கள். மக்களிடம் திமுகவுக்கு நன்மதிப்பில்லை அதனால் தான் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த பல வழிகளை தேடிக்கொண்டிருக்கிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தபின் நகர்புறங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளிவரும்.
இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் அனைவரும் திமுகவை வெறுக்கின்றனர். அதிமுக மதச்சார்பற்ற கட்சி. திமுக, காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி இல்லை. அதனால் தான் மத துஷ்பிரயோகம் செய்து மலிவான அரசியல் செய்து வருகிறது. அண்டை நாடுகளாக உள்ள இஸ்லாமிய நாடுகளில் இருந்து பாதிக்கபட்டு வரும் இந்து, கிறிஸ்துவ, மற்ற அனைத்து சமுதாய மக்களை காப்பாற்றவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார்.
இதனால் தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியா்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த வித பாதிப்பும் இல்லை. வங்கதேசத்தில் இருந்து தீவிரவாத தன்மையுடைய ஒரு கோடி போ் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளனா். அவா்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நினைக்கிறார். குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பை வைத்து மம்தா பானர்ஜி கீழ்தரமான அரசியல் செய்கிறார் என்று கூறினார்.
இதையும் படிங்க:
‘கோலம் போட்டது ஒரு குற்றமா’ - இளைஞர்களைக் கைது செய்த காவல் துறை, ஸ்டாலின் கண்டனம்!