ETV Bharat / state

பட்டாசு ஆலை விபத்தில் மேலும் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

விருதுநகர்: செங்குளம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பெண்கள் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

author img

By

Published : Oct 24, 2020, 12:24 PM IST

பட்டாசு ஆலை விபத்தில் மேலும் இரண்டு பெண்கள் உயிரிழப்பு
பட்டாசு ஆலை விபத்தில் மேலும் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகேயுள்ள செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான வருவாய்த் துறை அனுமதிபெற்ற பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர்.

இந்நிலையி்ல், பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மருந்துக் கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக நேற்று (அக்.23) வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள், வேல்தாய் உள்ளிட்ட ஐந்து பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூன்று நபர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு லட்சுமி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று (அக்.24) அதிகாலை மகாலட்சுமி என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகேயுள்ள செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான வருவாய்த் துறை அனுமதிபெற்ற பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர்.

இந்நிலையி்ல், பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மருந்துக் கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக நேற்று (அக்.23) வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள், வேல்தாய் உள்ளிட்ட ஐந்து பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூன்று நபர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு லட்சுமி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று (அக்.24) அதிகாலை மகாலட்சுமி என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.