விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருவழிப் பாதையாக மாற்றும் பணிகள், ரயில்வே துறை சார்பில் நடந்து வருகிறது. இதற்காக விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஏராளமான வெளிமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் சாத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செட் அமைத்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலம் தாராப்பூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் குமாரதாஸ் என்பவரின் மகன் பிஜன் குமார்தாஸ் (35). இவர், சாத்தூரில் தங்கியிருந்த தகர செட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலறிந்த சாத்தூர் அம்மாபெட்டி காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிஜன் குமார்தாஸின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை!