விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் சூழலில் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் தடை உத்தரவை மீறியதற்காக நேற்று (19 ஜூன் 2020) மட்டும் 592 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி உத்தரவை மீறியதற்காக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் இன்று வரை மாவட்டத்தில் மொத்தம் 20,059 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 20,481 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 12,035 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு மீறல்: 20 ஆயிரத்தைத் தாண்டிய வழக்குகள் - villupuram lockdown caseses
விழுப்புரம்: மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
![ஊரடங்கு மீறல்: 20 ஆயிரத்தைத் தாண்டிய வழக்குகள் 20 ஆயிரத்தை தாண்டிய கரோனா வழக்குகள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7700396-330-7700396-1592667049137.jpg?imwidth=3840)
விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் சூழலில் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் தடை உத்தரவை மீறியதற்காக நேற்று (19 ஜூன் 2020) மட்டும் 592 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி உத்தரவை மீறியதற்காக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் இன்று வரை மாவட்டத்தில் மொத்தம் 20,059 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 20,481 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 12,035 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.