ETV Bharat / state

நஷ்ட ஈடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி!

author img

By

Published : Jan 23, 2020, 7:42 AM IST

விழுப்புரம்: விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காத அரசுப் பேருந்தை விழுப்புரம் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

விழுப்புரத்தில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி
விழுப்புரத்தில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோகுலதாசு. கார் ஓட்டுநரான இவர், கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் அருகே காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற TN 31 N 4123 என்ற பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து கோகுலதாசுவின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கோகுலதாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கோகுலதாசுவின் மனைவி மோகனப்பிரியா, விபத்து தொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

நஷ்ட ஈடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி கோகுலதாசு குடும்பத்துக்கு போக்குவரத்துக் கழகம் ரூ.18 லட்சத்து 60 ஆயிரத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வந்த பேருந்தை, புதிய பேருந்து நிலையத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோகுலதாசு. கார் ஓட்டுநரான இவர், கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் அருகே காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற TN 31 N 4123 என்ற பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து கோகுலதாசுவின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கோகுலதாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கோகுலதாசுவின் மனைவி மோகனப்பிரியா, விபத்து தொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

நஷ்ட ஈடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி கோகுலதாசு குடும்பத்துக்கு போக்குவரத்துக் கழகம் ரூ.18 லட்சத்து 60 ஆயிரத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வந்த பேருந்தை, புதிய பேருந்து நிலையத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
Intro:விழுப்புரம்: விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்தை விழுப்புரம் நீதிமன்ற ஊழியர்கள் இன்று ஜப்தி செய்தனர்.
Body:விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோகுலதாசு. கார் ஓட்டுநரான இவர் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் அருகே காரில் வந்துகொண்டிருந்தபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற TN 31 N 4123 என்ற பதிவுஎண் கொண்ட அரசுப் பேருந்து கோகுலதாசு வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கோகுலதாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து கோகுலதாசு மனைவி மோகனப்பிரியா விபத்து நஷ்ட ஈடு கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி கோகுலதாசு குடும்பத்துக்கு போக்குவரத்து கழகம் ரூ.18 லட்சத்து 60 ஆயிரத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டது.

ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

Conclusion:அதன்படி இன்று புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வந்த பேருந்தை, புதிய பேருந்து நிலையத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

(இந்த செய்திக்கான விடியோ வாட்ஸ்-ஆப்பில் உள்ளது)

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.