விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் கழிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கருணா (எ) கருணாகரன். இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் கடத்துதல், மதுபாட்டில்கள் விற்றல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்தார். எனவே, மீது கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து, இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் உத்தரவிட்டார். அதன் பேரில் கருணாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர், கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.