ETV Bharat / state

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சிறையில் உள்ளோரை விசாரிக்க சிபிசிஐடி மனு!

author img

By

Published : Jul 26, 2022, 3:38 PM IST

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட ஐந்து பேரை காவலில் விசாரிக்க சிபிசிஐடி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சிறையில் உள்ளோரை விசாரிக்க சிபிசிஐடி மனு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சிறையில் உள்ளோரை விசாரிக்க சிபிசிஐடி மனு

விழுப்புரம்: கடந்த 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளி மாணவி மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார்(48), பள்ளியின் செயலாளரும், தாளாளரின் மனைவியுமான சாந்தி (44), பள்ளி முதல்வர் சிவசங்கரன்(57), வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா(40), கணித ஆசிரியை கீர்த்திகா(28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அவர்களை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விழுப்புரம் மாணவி உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றம்

விழுப்புரம்: கடந்த 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளி மாணவி மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார்(48), பள்ளியின் செயலாளரும், தாளாளரின் மனைவியுமான சாந்தி (44), பள்ளி முதல்வர் சிவசங்கரன்(57), வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா(40), கணித ஆசிரியை கீர்த்திகா(28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அவர்களை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விழுப்புரம் மாணவி உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.