ETV Bharat / state

6 மாதத்தில் நான்கு முறை கொள்ளை; அம்மன் கோயிலைக் குறிவைத்து திருடும் கும்பல்!

author img

By

Published : Dec 9, 2019, 4:01 PM IST

திருப்பத்தூர்: அம்மன் கோயிலைக் குறிவைத்து தொடர்ந்து கொள்ளையில் ஈடுபடும் திருடர்களைப் பிடிக்க முடியாமல் காவல் துறை திணறிவருகிறது.

thirupathur-amman-kovil-theft
thirupathur-amman-kovil-theft

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் குறிவைத்து கோயில் நகை, உண்டியல் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து வருகின்றனர்.

இதுபோன்ற தொடர் கொள்ளையில் ஈடுபடுவதால் கொள்ளையர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களா? வெளியூர்வாசிகளா? உள்ளூர்வாசிகளா? என்று காவல் துறையினர் குழம்பியுள்ளனர். ஒரே கும்பல்தான் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவருகிறது எனவும் காவல் துறை சந்தேகமடைந்துள்ளது.

நேற்று திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பிரசித்திப்பெற்ற மகா காளியம்மன் கோயில் உள்ளது. புதிதாக புதுப்பிக்கப்பட்டு வழிபட்டு வந்த காளியம்மன் கோயிலில், ஆறு மாதத்திற்குள் நான்கு முறை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஆறு மாதத்தில் நான்கு முறை அம்மன் கோயிலில் கொள்ளை

இதையடுத்து நேற்று இரவு கோயில் பிரகார கதவை உடைத்து உள்ளே சென்று கருவறையில் உள்ள கதவை உடைக்க கொள்ளையர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் முடியாமல் போகவே கோயில் வளாகத்தில் உள்ள வேறு கதவை உடைத்து ஐம்பொன் சிலைகளைத் திருட முயற்சித்தனர். அந்த அம்மன் சிலையை அசைக்கக்கூட முடியாமல் போகவே கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்ட ஆறு மாதங்களில் நான்கு முறை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பரமேஸ்வரன் கோயில் வெடி விபத்துக்கான இழப்பீடு கோரிய வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் குறிவைத்து கோயில் நகை, உண்டியல் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து வருகின்றனர்.

இதுபோன்ற தொடர் கொள்ளையில் ஈடுபடுவதால் கொள்ளையர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களா? வெளியூர்வாசிகளா? உள்ளூர்வாசிகளா? என்று காவல் துறையினர் குழம்பியுள்ளனர். ஒரே கும்பல்தான் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவருகிறது எனவும் காவல் துறை சந்தேகமடைந்துள்ளது.

நேற்று திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பிரசித்திப்பெற்ற மகா காளியம்மன் கோயில் உள்ளது. புதிதாக புதுப்பிக்கப்பட்டு வழிபட்டு வந்த காளியம்மன் கோயிலில், ஆறு மாதத்திற்குள் நான்கு முறை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஆறு மாதத்தில் நான்கு முறை அம்மன் கோயிலில் கொள்ளை

இதையடுத்து நேற்று இரவு கோயில் பிரகார கதவை உடைத்து உள்ளே சென்று கருவறையில் உள்ள கதவை உடைக்க கொள்ளையர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் முடியாமல் போகவே கோயில் வளாகத்தில் உள்ள வேறு கதவை உடைத்து ஐம்பொன் சிலைகளைத் திருட முயற்சித்தனர். அந்த அம்மன் சிலையை அசைக்கக்கூட முடியாமல் போகவே கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்ட ஆறு மாதங்களில் நான்கு முறை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பரமேஸ்வரன் கோயில் வெடி விபத்துக்கான இழப்பீடு கோரிய வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

Intro:திருப்பத்தூர் அருகே குறிப்பாக அம்மன் கோயிலில் குறிவைத்து திருடும் கொள்ளையர்கள்? வெளியூர் கொள்ளையர்களா ? உள்ளூர் கொள்ளையர்களா? காவல்துறை திணறல்?Body:



திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்ட பல பகுதிகளில் அம்மன் கோயிலில் குறிவைத்து தொடரும் கொள்ளை யாள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி திருப்பத்தூர். கந்திலி. உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் குறிவைத்து கோயிலிலுள்ள அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்கள் மாங்கல்யம் மற்றும் கோயில் நகை மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து வருகின்றனர் இவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களா. வெளியூர் வாசிக ளா உள்ளூர்வாசிகளா என்று காவல்துறையினர் குழம்பிப் போயுள்ளனர் காவல்துறைக்கே சவால் விடும் அந்த கொள்ளையர்கள் யார்?கோயிலையே குறிவைத்துக் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் ஒரே கும்பகாகதான் இருக்கமுடியும் போலீசார் சந்தேகம் அடைந்து வருகின்றனர்

இந்நிலையில் இன்று திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோயில் உள்ளது இந்த மகா காளி அம்மன் கோயில் புதுப்பித்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர் இந்தநிலையில் இந்த கோயிலில் ஆறு மாதத்திற்குள் நான்கு முறை மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வந்தனர்

இந்நிலையில் இன்று இரவு கோயில் பிரகாரம் கதவை உடைத்து உள்ளே சென்று கருவறையில் உள்ள கதவை உடைக்க முயற்சி செய்தனர் ஆனால் முடியாமல் போகவே கோயில் வளாகத்தில் உள்ள வேறு ஒரு கோயில் அரை கதவை உடைத்து ஐம்பொன் சிலைகளை திருட முயற்சித்தனர் அந்த அம்மன் சிலையை அசைக்க கூட முடியாமல் போகவே கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுவது இந்த கோயில் மிகவும் பழைமை வாய்ந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்டு வழிபட்டு வந்த மிகவும் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோயில் ஆகும் இந்த கோவிலின் மர்ம நபர்கள் அம்மன் சிலையை திருட முயற்சித்தனர் ஆனால் அம்மன் சக்தியால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர் என்று அப்பகுதி மக்கள் அம்மன் பக்தியின் கண்ணீரோடு கூறுகின்றனர்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.