ETV Bharat / state

’திமுக அளித்த அனைத்துமே பொய்யான வாக்குறுதிகள்’ - நீலோபர் கபில் - வாணியம்படி புதூர் நூலக திறப்பு விழா

வேலூர்: கடந்த தேர்தலில் திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் பொய்யான வாக்குறுதிகள் என மக்கள் புரிந்து கொண்டனர் எனத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்துள்ளார்.

minister Nilofer Kabil press meet
author img

By

Published : Oct 5, 2019, 3:39 AM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியில் நியாய விலைக் கடையும், பெண்களுக்கான நூலகமும் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், தொழிலாளர்கள் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபிலிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

கோரிக்கையை ஏற்று வாணியம்படி பகுதியில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடையும், நூருல்லா பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலக வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் செலவில் பெண்களுக்கான புதிய நூலகமும் கட்டப்பட்டது.

கட்டிடத் திறப்பு விழாவில் அமைச்சர் நீலோபர் கபீல் கலந்துகொண்டு புதிய நியாயவிலை கட்டிடத்தையும், நூலகத்தையும் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினர்.

நீலோபர் கபிலின் பேட்டி

அதேபோன்று, தற்போதைய தமிழ்நாடு அரசும் பெண்களின் மேம்பாட்டிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. பெண்களின் கல்விக்காக நமது கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பெண்கள் அறிவுமிக்கவராக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவிகளும் சான்றோர்கள் எழுதிய அனைத்தையும் படித்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நடந்து முடிந்த தேர்தல்களில் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றிபெற்றனர். திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் பொய்யான வாக்குறுதிகள் என்று மக்கள் தற்போது புரிந்துகொண்டார்கள்.

எனவே விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் மட்டுமல்ல, இனி வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக 100 விழுக்காடு வெற்றிபெறும் " என்று கூறினார்.

இதையும் படிங்க:கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியில் நியாய விலைக் கடையும், பெண்களுக்கான நூலகமும் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், தொழிலாளர்கள் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபிலிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

கோரிக்கையை ஏற்று வாணியம்படி பகுதியில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடையும், நூருல்லா பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலக வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் செலவில் பெண்களுக்கான புதிய நூலகமும் கட்டப்பட்டது.

கட்டிடத் திறப்பு விழாவில் அமைச்சர் நீலோபர் கபீல் கலந்துகொண்டு புதிய நியாயவிலை கட்டிடத்தையும், நூலகத்தையும் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினர்.

நீலோபர் கபிலின் பேட்டி

அதேபோன்று, தற்போதைய தமிழ்நாடு அரசும் பெண்களின் மேம்பாட்டிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. பெண்களின் கல்விக்காக நமது கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பெண்கள் அறிவுமிக்கவராக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவிகளும் சான்றோர்கள் எழுதிய அனைத்தையும் படித்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நடந்து முடிந்த தேர்தல்களில் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றிபெற்றனர். திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் பொய்யான வாக்குறுதிகள் என்று மக்கள் தற்போது புரிந்துகொண்டார்கள்.

எனவே விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் மட்டுமல்ல, இனி வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக 100 விழுக்காடு வெற்றிபெறும் " என்று கூறினார்.

இதையும் படிங்க:கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Intro:கடந்த தேர்தல்களில் திமுகவினர் அளித்த பொய்யான வாக்குறுதிகளை மக்கள் புரிந்துகொண்டார்கள் எனவே நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக 100% வெற்றி பெறும்.



வாணியம்பாடியில் அமைச்சர் நீலோபர் கபீல் என்று பேட்டி.
Body:





வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் என்ற இடத்தில் புதிய நியாய விலை கட்டிடம் மற்றும் பகுதியில் பெண்களுக்கான தனி நூலகம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நீலோபர் கபிலிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.பெண்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே வாணியம்பாடி புதூர் பகுதியில் ரூ 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடம் மற்றும் நூருல்லா பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம் வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.25 லட்சம் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல் கலந்து கொண்டு புதிய நியாய விலை கட்டிடத்தை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கி பின்னர். பின்னர் நூலகத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நீலோபர் கபீல்



மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி அதேபோன்று தமிழக அரசு பெண்களுக்காக பெண்கள் மேம்பாட்டிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளனர். பெண்கல்விக்காக நமது கல்வித் துறையில் எத்தனையோ மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.பெண்கள் அறிவு மிக்கவராக இருக்க வேண்டும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவிகளும் முன்னர் ஆன்றோர்கள் சான்றோர்கள் எழுதிய அனைத்தையும் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் வாணியம்பாடியில் மகளிர் க்கு என்று சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து தனி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.மேலும் பேசிய அவர் நடந்து முடிந்த தேர்தல்களில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து விட்டு பின்னர் கொடுத்த வாக்குறுதிகள் மக்களிடையே சென்றடையவில்லை சென்றடைய வாய்ப்பு இல்லை. மக்கள் திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் பொய்யான வாக்குறுதிகள் என்று மக்கள் புரிந்து கொண்டார்கள். எனவே விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மட்டுமல்ல இனி வரும்உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக 100% வெற்றி பெறும் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.