ETV Bharat / state

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட விபத்தில் நால்வர் பலி!

வேலூர்: செட்சிதாங்கல் பகுதியில் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உட்பட நான்கு பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jul 7, 2019, 10:40 PM IST

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த செட்டிதாங்கல் பகுதியைச் சேர்ந்த இளம்பருதி- ஷோபனா தம்பதி தங்களது ஒன்பது வயது மகன் தனுஷூடன் இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

விபத்து நிகழ்ந்த பகுதி

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கம் அருகே சுமைதாங்கி என்ற இடத்தில் சாலையைக் கடக்க முயன்ற காளிமுத்து என்பவர் மீது இவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காளிமுத்து படுகாயமடைந்தார்.

பின்னர், சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம்பருதி, ஷோபனா, தனுஷ் ஆகியோரும், சாலையைக் கடக்க முயன்ற காளிமுத்து என நால்வரும் பலத்த காயமடைந்தனர்.

வேலூர், விபத்து,
இளம்பருதி

இதனையடுத்து, சிகிச்சைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்து, குறித்து காவேரிப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர், விபத்து,
ஷோபனா

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த செட்டிதாங்கல் பகுதியைச் சேர்ந்த இளம்பருதி- ஷோபனா தம்பதி தங்களது ஒன்பது வயது மகன் தனுஷூடன் இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

விபத்து நிகழ்ந்த பகுதி

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கம் அருகே சுமைதாங்கி என்ற இடத்தில் சாலையைக் கடக்க முயன்ற காளிமுத்து என்பவர் மீது இவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காளிமுத்து படுகாயமடைந்தார்.

பின்னர், சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம்பருதி, ஷோபனா, தனுஷ் ஆகியோரும், சாலையைக் கடக்க முயன்ற காளிமுத்து என நால்வரும் பலத்த காயமடைந்தனர்.

வேலூர், விபத்து,
இளம்பருதி

இதனையடுத்து, சிகிச்சைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்து, குறித்து காவேரிப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர், விபத்து,
ஷோபனா
Intro:வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் அருகே விபத்தில்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு- காஞ்சி அத்திவரதர் தரிசனத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது பலியான சோகம் காவல் துறை விசாரணை. Body:வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த செட்டிதாங்கல் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி இளம்பருதி-சோபனா இவர்களது 9-வயது மகன் தனூஷ் ஆகிய 3 பேர் இருசக்கர வாகனத்தில் இன்று காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவிலுக்கு சென்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊர் திருபும் போது காவேரிபாக்கம் அருகே சுமைதாங்கி என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்ற காளிமுத்து ஏன்பவர் மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது. பின்னர் சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இளம்பருதி, ஷோபனா, தனூஷ் ஆகியோரும் சாலையை கடக்க முயன்ற காளிமுத்து என 4 பேரும் சிகிச்சைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் போது அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து காவேரிபாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். விபத்தில் இறந்த நான்கு பேரில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.