ETV Bharat / state

விதிமீறி தேர்தல் பரப்புரை - முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்பு - திமுக வேட்பாளர் கதிர்வேல் மீது புகார்

திருச்சி: விதிமீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் நேருவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விதிமீறி தேர்தல் பரப்புரை செய்த முன்னாள் அமைச்சர் நேரு
விதிமீறி தேர்தல் பரப்புரை செய்த முன்னாள் அமைச்சர் நேரு
author img

By

Published : Dec 26, 2019, 9:02 PM IST

திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல், இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலில் மணப்பாறை, வையம்பட்டி, மணிகண்டம், அந்தநல்லூர், திருவரம்பூர், மருங்காபுரி உள்ளிட்ட 6 ஒன்றியங்களுக்கும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. ஆனால் விதிமீறி அந்தநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட 10-ஆவது வார்டு மல்லியம்பத்து பகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் நேரு பரப்புரையில் ஈடுபட்டார்.

விதிமீறி தேர்தல் பரப்புரை செய்த முன்னாள் அமைச்சர் நேரு

இதை அறிந்த அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரின் ஆதரவாளர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் நேருவின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இரு தரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் விதிமீறி பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் துணை மேயர் அன்பழகன், திமுக வேட்பாளர் கதிர்வேல் ஆகியோர் மீது சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தேர்தல் அலுவலர் ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் ' - திமுக குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல், இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலில் மணப்பாறை, வையம்பட்டி, மணிகண்டம், அந்தநல்லூர், திருவரம்பூர், மருங்காபுரி உள்ளிட்ட 6 ஒன்றியங்களுக்கும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. ஆனால் விதிமீறி அந்தநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட 10-ஆவது வார்டு மல்லியம்பத்து பகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் நேரு பரப்புரையில் ஈடுபட்டார்.

விதிமீறி தேர்தல் பரப்புரை செய்த முன்னாள் அமைச்சர் நேரு

இதை அறிந்த அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரின் ஆதரவாளர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் நேருவின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இரு தரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் விதிமீறி பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் துணை மேயர் அன்பழகன், திமுக வேட்பாளர் கதிர்வேல் ஆகியோர் மீது சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தேர்தல் அலுவலர் ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் ' - திமுக குற்றச்சாட்டு

Intro:விதிமீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் நேருவுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டதுBody:திருச்சி:
விதிமீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் நேருவுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக மணப்பாறை, வையம்பட்டி, மணிகண்டம், அந்தநல்லூர், திருவரம்பூர், மருங்காபுரி உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது.
இந்நிலையில் இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 10-ஆவது வார்டு மல்லியம்பத்து பகுதியில் பிரச்சாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் நேரு தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது முன்னாள் அமைச்சர் நேருவுக்கு அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை அறிந்த அப்பகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர், சுயேட்ச்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கே.என்.நேரு வந்த வாகனத்தை வழிமறித்து தங்களது இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விதிமுறைகளை மீறி அப்பகுதியில் திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டன்ர், வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விதிமீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கே.என்.நேரு, முன்னாள் துணை மேயர் அன்பழகன் மற்றும் திமுக வேட்பாளர் கதிர்வேல் ஆகியோர் மீது திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் மல்லியம்பத்து கிராமத்தில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.