ETV Bharat / state

திமுக - விசிக கூட்டணியில் குழப்பமா? - திருமாவளவன் பதில்!

author img

By

Published : Mar 2, 2023, 11:09 PM IST

திமுக கூட்டணி 2019ஆம் ஆண்டில் இருந்து வலுவாக உள்ளது எனவும், திமுக - விசிக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக - விசிக கூட்டணியில் குழப்பமா? - திருமாவளவன் பதில்!
திமுக - விசிக கூட்டணியில் குழப்பமா? - திருமாவளவன் பதில்!

திருச்சி: திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழாய்வு துறை மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் கலந்து கொண்டார்.

விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

அதில் அவர், எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்கி உள்ளனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணியே தொடர வேண்டும் என்பதற்கான வெற்றியாக இது அமைந்துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், இது முதலமைச்சருக்கு கிடைத்த அங்கீகாரம். அதிமுக கூட்டணி என்பது சிதறிப் போனது. அவர்களுக்கு இடையில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை. முதலில் அதை பலவீனப்படுத்தியது, பாமக. இரண்டாவது அதிமுக உட்கட்சி குழப்பம். அடுத்து, எந்த அணியை ஆதரிக்க வேண்டும் என குழம்பிய பாஜகவின் நிலைப்பாடு.

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை அரவணைத்து செல்லக் கூடிய ஆளுமை தமிழ்நாடு பாஜகவில் இல்லை. இந்த காரணங்கள்தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். திமுக கூட்டணி 2019ஆம் ஆண்டில் இருந்து வலுவாக உள்ளது. ஆனால் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் நினைக்கின்றனர்.

விடுதலை சிறுத்தை கூட்டணியில் இருந்து வெளியேறப் போகிறது என மாநில பாஜக தலைவர் உள்பட சிலர் பேசிக்கொண்டுள்ளனர். ஆட்சி நிர்வாகத்தில் சில குறைகளை சுட்டிக் காட்டுகிறோம். ஆனால், எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக தெளிவாக உள்ளோம். அகில இந்திய அளவில் திமுக கூட்டணி வலிமை பெற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.

அகில இந்திய அளவில் பாஜக எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைக்கக் கூடிய சக்திகளை இந்த கூட்டணி பெறும். பாமக, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், கூட்டணியில் இருந்து விலகி, நாங்கள் இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளோம் என்று கூறுகிறது. அதாவது, திமுக உடனும் பேசுவோம் என்றும், அதிமுக உடனும் பேசுவோம் என்றும் கூறுகிறது.

மேலும் திமுக உடனும் எங்களுக்கு பேச முடியும் என அதிமுகவை மிரட்டுவது, அதிமுக உடன் பேச முடியும் என திமுகவை மிரட்டுவது என, இப்படித்தான் பாமக தேர்தல் கூட்டணி யுத்திகளை கடந்த காலங்களில் கையாண்டுள்ளது. எனவே பாமக, திமுக கூட்டணியில் வந்து விடும் என்பது எல்லாம் யூகம்” என கூறியுள்ள்ர்.

இதையும் படிங்க: 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழையும் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

திருச்சி: திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழாய்வு துறை மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் கலந்து கொண்டார்.

விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

அதில் அவர், எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்கி உள்ளனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணியே தொடர வேண்டும் என்பதற்கான வெற்றியாக இது அமைந்துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், இது முதலமைச்சருக்கு கிடைத்த அங்கீகாரம். அதிமுக கூட்டணி என்பது சிதறிப் போனது. அவர்களுக்கு இடையில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை. முதலில் அதை பலவீனப்படுத்தியது, பாமக. இரண்டாவது அதிமுக உட்கட்சி குழப்பம். அடுத்து, எந்த அணியை ஆதரிக்க வேண்டும் என குழம்பிய பாஜகவின் நிலைப்பாடு.

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை அரவணைத்து செல்லக் கூடிய ஆளுமை தமிழ்நாடு பாஜகவில் இல்லை. இந்த காரணங்கள்தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். திமுக கூட்டணி 2019ஆம் ஆண்டில் இருந்து வலுவாக உள்ளது. ஆனால் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் நினைக்கின்றனர்.

விடுதலை சிறுத்தை கூட்டணியில் இருந்து வெளியேறப் போகிறது என மாநில பாஜக தலைவர் உள்பட சிலர் பேசிக்கொண்டுள்ளனர். ஆட்சி நிர்வாகத்தில் சில குறைகளை சுட்டிக் காட்டுகிறோம். ஆனால், எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக தெளிவாக உள்ளோம். அகில இந்திய அளவில் திமுக கூட்டணி வலிமை பெற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.

அகில இந்திய அளவில் பாஜக எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைக்கக் கூடிய சக்திகளை இந்த கூட்டணி பெறும். பாமக, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், கூட்டணியில் இருந்து விலகி, நாங்கள் இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளோம் என்று கூறுகிறது. அதாவது, திமுக உடனும் பேசுவோம் என்றும், அதிமுக உடனும் பேசுவோம் என்றும் கூறுகிறது.

மேலும் திமுக உடனும் எங்களுக்கு பேச முடியும் என அதிமுகவை மிரட்டுவது, அதிமுக உடன் பேச முடியும் என திமுகவை மிரட்டுவது என, இப்படித்தான் பாமக தேர்தல் கூட்டணி யுத்திகளை கடந்த காலங்களில் கையாண்டுள்ளது. எனவே பாமக, திமுக கூட்டணியில் வந்து விடும் என்பது எல்லாம் யூகம்” என கூறியுள்ள்ர்.

இதையும் படிங்க: 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழையும் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.