ETV Bharat / state

நடிப்பது மட்டுமே நாடாளும் தகுதியாகாது - சீமான் காட்டம்

author img

By

Published : Nov 13, 2019, 11:53 AM IST

திருச்சி: நடந்து முடிந்த எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் வந்தால் முதலமைச்சராகத் தான் வருவேன் என்று ரஜினி கூறுவதை ஏற்க முடியாது, நடிப்பது மட்டுமே நாடாளும் தகுதியாகாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman vs rajini

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "நடிப்பது மட்டுமே நாடாளும் தகுதியாகாது. அரசியல் என்பது தத்துவம், கொள்கை போன்றவற்றை கொண்டது. ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றவர்கள் நீண்ட நாட்கள் அரசியிலில் ஈடுபட்டு பின்னர் தான் முதலமைச்சர் பதவிக்கு வந்தனர்.

அதுபோல் நீண்ட நாட்கள் அரசியிலில் ஈடுபட்டு பதவிக்கு வருவதை ஏற்கலாம். ஆனால் ரஜினி நடந்து முடிந்த இடைத்தேர்தல்கள் உள்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் நேரடியாக முதலமைச்சர் பதவிக்குத்தான் வருவேன் என்று கூறுகிறார்.அதனை ஏற்க முடியாது. தமிழ்நாட்டு அரசியிலில் சரியான ஆளுமை இல்லை என்று ரஜினி கூறுவது அவரை வாழ வைத்த இனத்தை அவமதிக்கும் செயல்.

வந்தால் முதலமைச்சராகத் தான் வருவேன் என்று ரஜினி கூறுவதை ஏற்க முடியாது - சீமான்

பெருமளவில் அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த மண் இது. அளப்பறிய ஆற்றல்களுடன் எண்ணெற்ற இளைஞர்கள் இந்த மண்ணில் உள்ளனர். அவர்களையெல்லாம் ரஜினி குறைத்து மதிப்பிட்டு ஆளுமை இல்லை ஆளுமை இல்லை என்று கூறி வருகிறார். அனைவருக்கும் தெரிந்த முகம் என்பதால் அவர் தலைவராகி விட முடியாது" என்றார்.

இதையும் படிங்க: ’திருக்குறளின் அடிப்படை கோட்பாட்டிற்கு எதிராக இந்து மதக்கோட்பாடு இருக்கிறது’ - திருமா

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "நடிப்பது மட்டுமே நாடாளும் தகுதியாகாது. அரசியல் என்பது தத்துவம், கொள்கை போன்றவற்றை கொண்டது. ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றவர்கள் நீண்ட நாட்கள் அரசியிலில் ஈடுபட்டு பின்னர் தான் முதலமைச்சர் பதவிக்கு வந்தனர்.

அதுபோல் நீண்ட நாட்கள் அரசியிலில் ஈடுபட்டு பதவிக்கு வருவதை ஏற்கலாம். ஆனால் ரஜினி நடந்து முடிந்த இடைத்தேர்தல்கள் உள்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் நேரடியாக முதலமைச்சர் பதவிக்குத்தான் வருவேன் என்று கூறுகிறார்.அதனை ஏற்க முடியாது. தமிழ்நாட்டு அரசியிலில் சரியான ஆளுமை இல்லை என்று ரஜினி கூறுவது அவரை வாழ வைத்த இனத்தை அவமதிக்கும் செயல்.

வந்தால் முதலமைச்சராகத் தான் வருவேன் என்று ரஜினி கூறுவதை ஏற்க முடியாது - சீமான்

பெருமளவில் அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த மண் இது. அளப்பறிய ஆற்றல்களுடன் எண்ணெற்ற இளைஞர்கள் இந்த மண்ணில் உள்ளனர். அவர்களையெல்லாம் ரஜினி குறைத்து மதிப்பிட்டு ஆளுமை இல்லை ஆளுமை இல்லை என்று கூறி வருகிறார். அனைவருக்கும் தெரிந்த முகம் என்பதால் அவர் தலைவராகி விட முடியாது" என்றார்.

இதையும் படிங்க: ’திருக்குறளின் அடிப்படை கோட்பாட்டிற்கு எதிராக இந்து மதக்கோட்பாடு இருக்கிறது’ - திருமா

Intro:நேரடியாக முதலமைச்சராக தான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறுவதை ஏற்க முடியாது என்று சீமான் கூறினார்.Body:திருச்சி:
நேரடியாக முதலமைச்சராக தான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறுவதை ஏற்க முடியாது என்று சீமான் கூறினார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு சீமான் பதில் கூறுகையில், அரசியலுக்கு வருவதற்கு நடிப்பது மட்டுமே தகுதி கிடையாது. நடிக்கும்போது மக்களிடம் கொண்ட ஈடுபாடு தான் அதை நிர்ணயம் செய்யும். தத்துவம், கொள்கை போன்றவற்றைக் கொண்டு தான் அரசியல் முடிவாகும். எனினும் அவர்களது கட்சியை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வந்தால் ஏற்புடையது என்றும், மற்றவர்கள் வந்தால் ஏற்புடையது இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

தொடர்ந்து சீமான் பேசுகையில், ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றவர்கள் எப்படி அரசியலுக்கு வந்தார்கள்?. தற்போது ஆகப்பெரும் தலைவர்கள் என்று யாரையும் முடியாது. நல்லகண்ணு வை மட்டும் தான் அவ்வாறு கூறமுடியும். நடிப்பது மட்டுமே நாடாளுவதற்கான தகுதி என்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள். எம்ஜிஆரும் நீண்ட நாட்கள் அரசியலில் ஈடுபட்டு தான் பதவிக்கு வந்தார். அது போல் நீண்ட நாட்கள் அரசியலில் ஈடுபட்டு பதவிக்கு வருவதைத் ஏற்கலாம். ஆனால் ரஜினி எந்த இடைத்தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடாமல் நேரடியாக முதல்வர் பதவிக்கு தான் வருவேன் என்று கூறுகிறார். அவர் தற்போது பணத்தை தேடி ஓடுகிறார். ஆளுமை என்பது முகத்தை வைத்து முடிவு செய்வது கிடையாது. மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு, வேளாண்மை, நிலம், வளம், அரசியல் ஆகியவற்றை வைத்து முடிவு செய்ய கூடியதாகும். அனைவருக்கும் தெரிந்த முகம் என்பதால் அவர் தலைவராகி விட முடியாது. அரசியலில் அர்ப்பணிப்பு வேண்டும். ரஜினியின் இத்தகைய கருத்து அவரை வாழ வைத்த மக்களை இழிவு படுத்தக்கூடிய தாகும்.
பேனர், கொடி போன்ற கலாச்சாரங்களை ஆண்ட இரண்டு கட்சிகளும் தான் உருவாக்கின. இதனால்தான் விபத்துகள் தற்போது நடைபெறுகிறது. வாக்குப்பதிவு விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர் தேர்வு செய்யும் முறை கொண்டு வந்தால் நல்லது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.