ETV Bharat / state

17 ஆயிரம் ரூபாயை திருடிய வெளிநாட்டு தம்பதி - திருச்சி திருட்டு

திருச்சி:மணப்பாறை அருகே உரிமையாளர் கண் முன்னே ரூ.17 ஆயிரத்தை வெளிநாட்டுத் தம்பதியினர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trichy cctv visual
author img

By

Published : Sep 18, 2019, 5:24 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பர்ஷத் அலி என்பவர் திருச்சி சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று பிற்பகலில் கட்டிங் வீல் வாங்க, அவரது கடைக்கு துருக்கி நாட்டைச் சேர்ந்த ஜோடி வந்தனர். வந்தவர்கள் பொருட்கள் வாங்கிய பின், சில்லறை தாள்கள் கொடுத்து அதற்கு மாற்றாக ரூ.2 ஆயிரம் முழு நோட்டை பெற்றனர்.

அதே நேரத்தில் அந்த பெண் பேச்சுக் கொடுத்து திசை திருப்ப அந்த வெளிநாட்டுப் பயணி நோட்டைத் தானே கிழித்துவிட்டு, ரூபாய் கிழிந்துள்ளது என்றும் தனக்கு CL வரிசை தாள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது CL நோட்டைத் தேடுவதைப்போல லாவகமாக 17 ஆயிரம் ரூபாயை அந்த வெளிநாட்டுப் பயணி திருடி தன் பையில் போட்டுக்கொண்டு வேகவேகமாக சென்றுவிட்டனர்.

அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ.17 ஆயிரம் குறைந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சிசிவிடி பதிவை பார்த்தபோது அந்த ஆண் சில 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கைக்குள் மறைத்து எடுத்து தனது பாக்கெட்டில் வைப்பது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகள்

இதனையடுத்து பர்ஷத் அலி மணப்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து வெளிநாட்டு ஜோடியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: திருட வந்த இடத்தில் ஊஞ்சல் ஆடிய திருடன்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பர்ஷத் அலி என்பவர் திருச்சி சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று பிற்பகலில் கட்டிங் வீல் வாங்க, அவரது கடைக்கு துருக்கி நாட்டைச் சேர்ந்த ஜோடி வந்தனர். வந்தவர்கள் பொருட்கள் வாங்கிய பின், சில்லறை தாள்கள் கொடுத்து அதற்கு மாற்றாக ரூ.2 ஆயிரம் முழு நோட்டை பெற்றனர்.

அதே நேரத்தில் அந்த பெண் பேச்சுக் கொடுத்து திசை திருப்ப அந்த வெளிநாட்டுப் பயணி நோட்டைத் தானே கிழித்துவிட்டு, ரூபாய் கிழிந்துள்ளது என்றும் தனக்கு CL வரிசை தாள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது CL நோட்டைத் தேடுவதைப்போல லாவகமாக 17 ஆயிரம் ரூபாயை அந்த வெளிநாட்டுப் பயணி திருடி தன் பையில் போட்டுக்கொண்டு வேகவேகமாக சென்றுவிட்டனர்.

அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ.17 ஆயிரம் குறைந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சிசிவிடி பதிவை பார்த்தபோது அந்த ஆண் சில 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கைக்குள் மறைத்து எடுத்து தனது பாக்கெட்டில் வைப்பது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகள்

இதனையடுத்து பர்ஷத் அலி மணப்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து வெளிநாட்டு ஜோடியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: திருட வந்த இடத்தில் ஊஞ்சல் ஆடிய திருடன்!

Intro:பட்டப்பகலில் நூதன முறையில் கொள்ளை - CCTVயில் சிக்கிய வெளிநாட்டு ஜோடி.Body:திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பர்ஷத் அலி என்பவர் திருச்சி சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் கட்டிங் வீல் வாங்க அவரது கடைக்கு கார் ஒன்றில் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் என கூறிக் கொண்டு ஒரு ஆண் மற்றும் பெண் வந்துள்ளனர். வந்தவர்கள் பொருட்கள் வாங்கிய பின், வேறு சில்லறை தாள்கள் கொடுத்து அதற்கு மாற்றாக ரூ.2 ஆயிரம் முழு நோட்டை கேட்டுள்ளார் அந்த ஆண், அதே நேரத்தில் அந்த பெண் கடையில் இருந்த மற்ற ஊழியர்களை பேச்சு கொடுத்து திசை திருப்பியுள்ளார். அந்த நிலையில் வெளிநாட்டு பயணி, பர்ஷத் அலியிடம் மாற்று 2 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். அதனைத்தொடர்ந்து பேச்சு கொடுத்துகொண்டே அந்த நோட்டை தானே கிழித்துவிட்டு, ரூபாய் கிழிந்துள்ளது என்றும் தனக்கு CL வரிசை தாள் வேண்டும் என்றும், அதுதான் எங்கள் நாட்டில் அதிக மதிப்பு என்றும் கூறி CL வரிசைக்கொண்ட ரூ2 ஆயிரம் தாளை பெறும் பொருட்டு அங்குள்ள பண தாள்களை கையில் வாங்குவது போல் எடுத்து அதில் குறிப்பிட்ட நோட்டு வேண்டுமென கூறிவிட்டு கையை எடுத்து கொள்கிறார். அதன் பின் அங்கிருந்து வேகவேகமாக சென்றுவிட்ட நிலையில், அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே கள்ளாப்பெட்டியில் இருந்த பணத்தை எண்ணி பார்த்தபோது அதில் ரூ.17 ஆயிரம் குறைந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சிசிவிடி பதிவை பார்த்த பர்ஷத் அலி, அதில் பணத்தை கைப்பற்றி அந்த ஆண் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை தேடியபோது தந்திரமாக சில பணத்தாள்களை கைக்குள் மறைத்து எடுத்து தனது பாக்கெட்டில் வைப்பது தெரியவந்தது. இதனையடுத்து பர்ஷத் அலி மணப்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் வெளிநாட்டு ஜோடியை தேடி வருகின்றனர்.

பட்டபகலில் பொருட்கள் வாங்குவது போல் வெளிநாட்டு ஜோடி நாடகமாடி நூதன முறையில் கொள்ளையடித்துள்ள சம்பவம் கடை உரிமையாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.