ETV Bharat / state

கஞ்சா கும்பலால் கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட பொறியியல் மாணவர் உடல் மீட்பு

author img

By

Published : Nov 2, 2019, 10:07 AM IST

திருச்சி: கஞ்சா போதை கும்பலால் கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவரின் உடல் மீட்கப்பட்டது.

Engineering Student Body Recovery Trichy, கஞ்சா போதை கும்பலால் கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட இன்ஜினியரிங் மாணவர் உடல் மீட்பு

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஜீவித்குமார் (20). இவர் அண்ணா பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் அதேபகுதியை சேர்ந்த பெண்கள் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 30ஆம் தேதி, சமயபுரம் பகுதியிலுள்ள கொள்ளிடம் ஆற்று பாலத்தில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்தனர். இதனை ஜீவித்குமார் தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், ஜீவித்குமாரை தூக்கி கொள்ளிடம் ஆற்றில் வீசினர். அவர்களிடம் இருந்து தப்பித்த மாணவி, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட பொறியியல் மாணவர் உடல் மீட்பு

மாணவி கொடுத்த புகாரின் பேரில் ஜீவித்குமாரை ஆற்றில் தூக்கி வீசிய மண்ணச்சநல்லூர் தேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் கலையரன் (22), புள்ளம்பாடி மணக்காடு பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் கோகுல் (21) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை ஸ்ரீரங்கம் நீதித்துறை நடுவர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் காவலர்கள் அடைத்தனர். காவலர்களின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகவுள்ள அவர்களது நண்பர்களையும் காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட ஜீவித்குமார் உடல் மூன்று நாட்களுக்கு பின்னர் கரை ஒதுங்கியது. பனையபுரம் அருகே மீட்கப்பட்ட அவரது உடல், உடற்கூறாய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பெண் சிசுவை முட்புதரில் வீசிய கொடூரம்... உயிருடன் மீட்பு!

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஜீவித்குமார் (20). இவர் அண்ணா பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் அதேபகுதியை சேர்ந்த பெண்கள் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 30ஆம் தேதி, சமயபுரம் பகுதியிலுள்ள கொள்ளிடம் ஆற்று பாலத்தில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்தனர். இதனை ஜீவித்குமார் தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், ஜீவித்குமாரை தூக்கி கொள்ளிடம் ஆற்றில் வீசினர். அவர்களிடம் இருந்து தப்பித்த மாணவி, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட பொறியியல் மாணவர் உடல் மீட்பு

மாணவி கொடுத்த புகாரின் பேரில் ஜீவித்குமாரை ஆற்றில் தூக்கி வீசிய மண்ணச்சநல்லூர் தேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் கலையரன் (22), புள்ளம்பாடி மணக்காடு பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் கோகுல் (21) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை ஸ்ரீரங்கம் நீதித்துறை நடுவர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் காவலர்கள் அடைத்தனர். காவலர்களின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகவுள்ள அவர்களது நண்பர்களையும் காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட ஜீவித்குமார் உடல் மூன்று நாட்களுக்கு பின்னர் கரை ஒதுங்கியது. பனையபுரம் அருகே மீட்கப்பட்ட அவரது உடல், உடற்கூறாய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பெண் சிசுவை முட்புதரில் வீசிய கொடூரம்... உயிருடன் மீட்பு!

Intro:
கஞ்சா போதை இளைஞர்களால் கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட இன்ஜினியரிங் மாணவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
Body:

திருச்சி:

கஞ்சா போதை இளைஞர்களால் கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட இன்ஜினியரிங் மாணவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் ஜீவித்குமார் (20). திருச்சி அண்ணா பொறியியல் கல்லூரியில் எலட்ரிக்கல் அண்டு எலட்ரானிக்கல் இஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இதே துறையூர் அருகே புலிவலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள காவேரி பெண்கள் கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் பயின்று வருகிறார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 30ம் தேதி திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் பகுதியில் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது
அப்பகுதியில் கஞ்சா போதையில் இருந்த
5 பேர் கொண்ட கும்பல் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ஜீவித்தை அந்த கும்பல் கடுமையாக தாக்கி, அவர் அணிந்திருந்த பையுடன் கொள்ளிடம் ஆற்றின் தண்ணிரீல் தூக்கி வீசினர். இதில் 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்லும் ஆற்றில் மாணவர் ஜீவித் மூழ்கி மாயமானார். போதை கும்பலிடம் இருந்து தப்பிய மாணவி கொள்ளிடம் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தார். மாணவி கொடுத்த புகாரின் பேரில் ஜீவித்தை ஆற்றில் தூக்கி வீசிய மண்ணச்சநல்லூர் தேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் கலையரன் (22), புள்ளம்பாடி மணக்காடு பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் கோகுல் (21) ஆகியோரைக் கைது செய்து ஸ்ரீரங்கம் நீதித்துறை நடுவர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவரையும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரில் முக்கிய வீசப்பட்ட மாணவரை ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவன் பயன்படுத்திய பை சம்பவம் நடந்த பகுதியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொண்னுரங்கபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒதுங்கியது. தொடர்ந்து ஜீவித்தை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 3 வது நாளாக இன்று கல்லணை அணைக்கட்டு வரை தீவிரமாக தேடி வந்தனர்.
சம்பவ இடத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனையபுரம் அருகே திருப்பால்துறை கொள்ளிடம் ஆற்றில் மாணவன் ஜீவித் உடல் சடலமாக மிதந்து வந்ததை கண்ட தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேட்டி: செல்வகுமார்... உயிரழந்த ஜீவித் அண்ணன்...Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.