ETV Bharat / state

இரட்டை வேடம் போடும் திமுக -வானதி சீனிவாசன்

author img

By

Published : Sep 24, 2019, 5:45 PM IST

திருச்சி: இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

vanathi srinivasan

திருச்சி மாவட்டம் உறையூரில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்று கலந்துரையாடினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், 'தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் யாரும் கூறவில்லை. மும்மொழி திட்டத்தில் இந்தி பயிலலாம் என்று கூறப்பட்டுள்ளதை சிலர் அரசியலாக்குகின்றனர்.

இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. இந்தியாவிலுள்ள பல மொழிகள்தான் எங்களது பலம் என்று பிரதமர் மோடி அமெரிக்காவில் பேசியுள்ளார். ஆனால், அதுகுறித்து யாரும் பேசுவது கிடையாது. தமிழ்நாடு கல்வி திட்டத்தில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித அறிவியல் அறிவு இல்லை. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை என்று குறை கூறுகின்றனர்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அங்கு யார்? யார்? பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் என்பதையும் கட்சிதான் முடிவு செய்யும். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர்கள் யாரும் இதுவரை அறிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறதா? என்ற கேள்வியே தவறானது.

தமிழ்நாடு பாஜகவிற்கு விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார். தலைவர் இல்லை என்ற காரணத்தால் கட்சிப் பணி எதுவும் நின்றுவிடவில்லை' என்றார்.

திருச்சி மாவட்டம் உறையூரில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்று கலந்துரையாடினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், 'தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் யாரும் கூறவில்லை. மும்மொழி திட்டத்தில் இந்தி பயிலலாம் என்று கூறப்பட்டுள்ளதை சிலர் அரசியலாக்குகின்றனர்.

இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. இந்தியாவிலுள்ள பல மொழிகள்தான் எங்களது பலம் என்று பிரதமர் மோடி அமெரிக்காவில் பேசியுள்ளார். ஆனால், அதுகுறித்து யாரும் பேசுவது கிடையாது. தமிழ்நாடு கல்வி திட்டத்தில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித அறிவியல் அறிவு இல்லை. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை என்று குறை கூறுகின்றனர்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அங்கு யார்? யார்? பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் என்பதையும் கட்சிதான் முடிவு செய்யும். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர்கள் யாரும் இதுவரை அறிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறதா? என்ற கேள்வியே தவறானது.

தமிழ்நாடு பாஜகவிற்கு விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார். தலைவர் இல்லை என்ற காரணத்தால் கட்சிப் பணி எதுவும் நின்றுவிடவில்லை' என்றார்.

Intro:பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.


Body:திருச்சி:
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த பாஜக கூட்டணி இடைத்தேர்தலில் உறுதியாக வெற்றி பெறும் என்று வானதி சீனிவாசன் கூறினார் .
திருச்சி உறையூரில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்து பாஜக தலைவர்கள் மாவட்ட வாரியாகவும், நாடாளுமன்ற தொகுதி வாரியாக விளக்கம் அளித்து வருகின்றனர். தற்போது கட்சியின் அமைப்பு தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இந்தி திணிக்கப்படுவதாக கூறி சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒருபுறம் தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் யாரும் கூறவில்லை. ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வழி கல்வி அவசியம் என்று புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மும்மொழி திட்டத்தில் இந்தி பயிலலாம் என்று கூறப்பட்டுள்ளதை சிலர் அரசியலாக்குகின்றனர். குறிப்பாக இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது மக்கள் மத்தியில் இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு இல்லாத காரணத்தால் தான் ஏதோ ஒரு காரணத்தை கூறி திமுக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. இந்தியாவிலுள்ள பல மொழிகள் தான் எங்களது பலம் என்று பிரதமர் மோடி அமெரிக்காவில் பேசி உள்ளார். ஆனால் அதுகுறித்து யாரும் பேசுவது கிடையாது. தமிழக கல்வி திட்டத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித அறிவியல் அறிவு இல்லை. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை என்று குறை கூறுகின்றனர். இதன் காரணமாக கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டு வர முயன்றால் அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தமிழக அரசு ஒரு ஆய்வு மேற்கொண்டு 5,8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இதை பொறுத்திருந்து சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாகவே பெட்ரோல். டீசல் விலை உயர்கிறது. பெட்ரோல் டீசல் மூலம் வரும் வருவாய் முழுவதும் கட்டமைப்பு பணிகளுக்காக செலவிடப்படுகிறது. நாங்குநேரி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும். அங்கு யார்? யார்? பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும் என்பதையும் கட்சி தான் முடிவு செய்யும். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் மீது யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் நூலிழையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்தது. தற்போதைய எதிர்வரும் இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர்கள் யாரும் இதுவரை அறிவிக்கவில்லை. அப்படி இருக்கும் போது அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறதா? என்ற கேள்வியே தவறானது.
தமிழக பாஜக விற்கு விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார். தலைவர் இல்லை என்ற காரணத்தால் கட்சிப் பணி எதுவும் நின்றுவிடவில்லை என்றார்.


Conclusion:இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு இல்லாத காரணத்தால் தான் திமுக போராட்டத்தை வாபஸ் பெற்றது என்று வானதி சீனிவாசன் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.