திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆக.20) புதியதாக மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. இம்மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,299ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 1,752 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் 47 ஆயிரத்து 918 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 2,097 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். அதே சமயம் 3,795 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.