திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 12) ஒரே நாளில் 72 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1799 பேர் பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் 33 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து இம்மாவட்டத்தில் 38,348 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 1824 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். தற்போது 3938 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் புதிதாக 44 பேருக்கு கரோனா உறுதி!