ETV Bharat / state

தனியார் நூற்பாலை தொழிலாளர்களுக்கு கரோனா: ஆலையின் வாகனத்தை மறித்து போராட்டம்

author img

By

Published : Jul 26, 2020, 9:46 AM IST

தூத்துக்குடி: தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்த 85 தொழிலாளர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தொழிலாளர்களை பணிக்கு அழைத்துச்செல்லும் வாகனத்தை மறித்து சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டம்
போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்வே நிலையம் எதிரே செயல்பட்டு வரும் லாயல் மில்லில் 85 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 1,110 தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் முடிவுகள் வராமல் உள்ளன.

இந்நிலையில், இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களை அந்த ஆலையின் மற்றொரு கிளை ஆலைக்கு அழைத்துச் வந்த வாகனத்தை மறித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கோயில்பட்டி தாசில்தார் மணிகண்டன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பணிக்கு செல்லும் தொழிலாளர்கள்
பணிக்கு செல்லும் தொழிலாளர்கள்

இதுபற்றி முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்வே நிலையம் எதிரே செயல்பட்டு வரும் லாயல் மில்லில் 85 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 1,110 தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் முடிவுகள் வராமல் உள்ளன.

இந்நிலையில், இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களை அந்த ஆலையின் மற்றொரு கிளை ஆலைக்கு அழைத்துச் வந்த வாகனத்தை மறித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கோயில்பட்டி தாசில்தார் மணிகண்டன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பணிக்கு செல்லும் தொழிலாளர்கள்
பணிக்கு செல்லும் தொழிலாளர்கள்

இதுபற்றி முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.