ETV Bharat / state

அரசு மருத்துவமனை பின்புறம் அழுகிய நிலையில் ஆண் சிசு; போலீஸ் விசாரணை!

author img

By

Published : Jan 5, 2020, 4:41 PM IST

திருவாரூர்: மன்னார்குடி அரசு மருத்துவமனையின் பின்புறத்தில் இருந்து அழுகிய நிலையில் ஆண் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆண் பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு
ஆண் பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் பின்பக்கத்தில் உள்ள ஆனந்த விநாயகர் குளத்தில் இரண்டு சிறுவர்கள் பொம்மை மிதக்கிறது என நினைத்து அதன்மீது கல்வீசி விளையாடிக்கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்தவர்கள் அதைப் பார்த்து, குழந்தை என்பதைக் கண்டறிந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அழுகிய நிலையில் இருந்த பச்சிளம் ஆண் சிசுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆண் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுப்பு

மேலும், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு: இறுதிச் சடங்குக்கு பணம் வழங்கி நெகிழ வைத்த எஸ்ஐ!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் பின்பக்கத்தில் உள்ள ஆனந்த விநாயகர் குளத்தில் இரண்டு சிறுவர்கள் பொம்மை மிதக்கிறது என நினைத்து அதன்மீது கல்வீசி விளையாடிக்கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்தவர்கள் அதைப் பார்த்து, குழந்தை என்பதைக் கண்டறிந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அழுகிய நிலையில் இருந்த பச்சிளம் ஆண் சிசுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆண் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுப்பு

மேலும், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு: இறுதிச் சடங்குக்கு பணம் வழங்கி நெகிழ வைத்த எஸ்ஐ!

Intro:Body:
மன்னார்குடி அரசு மருத்துவமனையின் பின்பக்க குளத்தில் அழுகிய நிலையில் ஆண் பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் பின்பக்கத்தில் உள்ள ஆனந்த விநாயகர் குளத்தில் இரண்டு சிறுவர்கள் பொம்மை மதக்கிறது என நினைத்து மிந்த குழந்தை அருகே கல்வீசி விளையாடிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அதை பார்த்தவிட்டு பொம்மை இல்லை குழந்தை என கூறி காவல் துறையினர்க்கு தகவல் அளித்ததன் பேரிலும், கிராமநிர்வாக அலுவலர் தமிழரசன் புகார் அளித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து அழுகிய நிலையில் இருந்த பிறந்து 2நாட்களே ஆன ஆண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையின் பின்பக்க குளத்தில் அழுகிய நிலையில் உள்ள பச்சிளம் குழந்தையின் சடலம் யாருடைய குழந்தை, எதற்காக குழந்தையை குளத்தில் வீசி சென்றுள்ளனர் என்பது குறித்து போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் .
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.