ETV Bharat / state

விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு - விநாயகர் சிலை

திருவண்ணாமலை மாவட்டம், இசுக்கரழி காட்டேரி கிராமத்தில் விநாயகர் ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் ஊர்வலம்
விநாயகர் ஊர்வலம்
author img

By

Published : Sep 3, 2022, 2:56 PM IST

Updated : Sep 3, 2022, 3:14 PM IST

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கடந்த புதன்கிழமை(ஆகஸ்ட் 31) கொண்டாடப்பட்ட நிலையில் இன்று(செப்.02) திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இசுக்கழி காட்டேரி கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் திலீப் என்ற 12 வயது சிறுவன் கலந்து கொண்டார். அப்போது ஊர்வலம் நடந்துகொண்டிருக்கும் தருணத்தில் எதிர்பாராத விதமாக திலீப் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் மயக்கம் அடைந்த திலீபனை அங்கிருந்தோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பின்னர் சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து வெரையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் ஊர்வலத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது 2 தரப்பு மோதல்

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கடந்த புதன்கிழமை(ஆகஸ்ட் 31) கொண்டாடப்பட்ட நிலையில் இன்று(செப்.02) திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இசுக்கழி காட்டேரி கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் திலீப் என்ற 12 வயது சிறுவன் கலந்து கொண்டார். அப்போது ஊர்வலம் நடந்துகொண்டிருக்கும் தருணத்தில் எதிர்பாராத விதமாக திலீப் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் மயக்கம் அடைந்த திலீபனை அங்கிருந்தோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பின்னர் சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து வெரையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் ஊர்வலத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது 2 தரப்பு மோதல்

Last Updated : Sep 3, 2022, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.