ETV Bharat / state

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Feb 11, 2020, 3:44 PM IST

திருவள்ளூர்: ஆலத்தூர் ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்துவரும் இருளர் சமுதாயத்தினருக்கு சாதி சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

villagers filed a petition
villagers filed a petition to District Collector demanding the Home strap

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் மண்டலத்துக்குட்பட்ட ஆலத்தூர், பாலவேடு, வெல்லச்சேரி, கரிக்கலபாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்துவரும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில் ”கடந்த 25 ஆண்டுகளாக வசித்துவரும் தங்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்களை பெற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். பள்ளிப் பிள்ளைகளைப் படிக்க வைக்க சாதி சான்றிதழை அவசியம் ஆக்க வேண்டும். எனவே அதை உடனடியாக வழங்க வேண்டும். குடியிருக்க நிலையான வீடு இல்லாததால் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பிரபு இதுகுறித்து கூறும்போது ”அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய நிலையில் வசித்துவரும் இந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 'எங்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்' - மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் மண்டலத்துக்குட்பட்ட ஆலத்தூர், பாலவேடு, வெல்லச்சேரி, கரிக்கலபாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்துவரும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில் ”கடந்த 25 ஆண்டுகளாக வசித்துவரும் தங்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்களை பெற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். பள்ளிப் பிள்ளைகளைப் படிக்க வைக்க சாதி சான்றிதழை அவசியம் ஆக்க வேண்டும். எனவே அதை உடனடியாக வழங்க வேண்டும். குடியிருக்க நிலையான வீடு இல்லாததால் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பிரபு இதுகுறித்து கூறும்போது ”அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய நிலையில் வசித்துவரும் இந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 'எங்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்' - மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கை

Intro:திருவள்ளூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் இருளர் சமுதாயத்தினருக்கு ஜாதி சான்றிதழ் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வில்லிவாக்கம் ஒன்றியக் குழு 3-ஆவது வார்டு உறுப்பினர் பா பிரபு கோரிக்கை மனுவை கொடுத்தார்.


Body:10_02_2020

திருவள்ளூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் இருளர் சமுதாயத்தினருக்கு ஜாதி சான்றிதழ் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வில்லிவாக்கம் ஒன்றியக் குழு 3-ஆவது வார்டு உறுப்பினர் பா பிரபு கோரிக்கை மனுவை கொடுத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட ஆலத்தூர் பாலவேடு வெல்லச்சேரி கரிக்கலபாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். இந்த மனுவில் கடந்த 25 ஆண்டு காலமாக வசித்து வரும் தங்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்களை பெறவும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் பள்ளிப் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் ஜாதி சான்றிதழ் அவசியம் ஆக வேண்டும் என்றும் ஆகையால் அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மேலும் குடியிருக்க நிலையான வீடு இல்லாததால் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்திருந்தனர் கோரிக்கை மனுவைக் கொடுத்து விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியில் மேளதாளத்துடன் ஆடிப்பாடி தங்களது மனைவியை அழைத்து குறித்து திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் சகோதரரும் வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பிரபு கூறும்போது அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 25 ஆண்டு காலமாக மிகவும் பின்தங்கிய நிலையில் வசித்து வரும் இந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் மேலும் இவர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்றும் மனு அளித்தனர்.

பேட்டி

பிரபு


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.