ETV Bharat / state

'மத்திய அரசின் அடிமையாக மாநில அரசு உள்ளது' -  பிருந்தா காரத்

author img

By

Published : Oct 13, 2019, 11:06 PM IST

திருவள்ளூர்: மத்திய அரசின் அடிமையாக  மாநில அரசான அதிமுக அரசு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

Brinda Karat

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்கான மாநில சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த மோடி அரசினால் இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால், பொதுமக்களின் மாத வருமான அளவு வெகுவாக குறைந்துவிட்டது. பணப்புழக்கம் அடியோடு குறைந்து தொழில் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசானது மத்திய அரசின் அடிமையாக உள்ளது. அதிமுக அரசுக்கென தனி செயல்பாடுகள் என்று எதுவும் இல்லை என்றார்.

இதையும் படிங்க:

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: அப்பட்டமாக பொய் பேசும் மோடி, அமித் ஷா - பிருந்தா காரத்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்கான மாநில சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த மோடி அரசினால் இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால், பொதுமக்களின் மாத வருமான அளவு வெகுவாக குறைந்துவிட்டது. பணப்புழக்கம் அடியோடு குறைந்து தொழில் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசானது மத்திய அரசின் அடிமையாக உள்ளது. அதிமுக அரசுக்கென தனி செயல்பாடுகள் என்று எதுவும் இல்லை என்றார்.

இதையும் படிங்க:

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: அப்பட்டமாக பொய் பேசும் மோடி, அமித் ஷா - பிருந்தா காரத்

Intro:மத்திய மோடியின் அரசின் அடிமையாக மாநில அதிமுக அரசு உள்ளது என்றும் மத்திய மோடி அரசின் அனைத்து திட்டங்களும் கடும் விமர்சனங்களையும் விவாதப் பொருளாகவும் ஆகி வருகிறது என்றும் சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்


Body:மத்திய மோடியின் அரசின் அடிமையாக மாநில அதிமுக அரசு உள்ளது என்றும் மத்திய மோடி அரசின் அனைத்து திட்டங்களும் கடும் விமர்சனங்களையும் விவாதப் பொருளாகவும் ஆகி வருகிறது என்றும் சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிபிஐஎம் கட்சியின் சார்பில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசி அமைப்பின் அகில இந்திய மத்திய குழுக் கூட்டம் மற்றும் மாநில சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பங்கேற்று சிறப்புரையாற்றினார் முன்னதாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் மத்திய மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது இந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது .

என்றும் கடந்த நாற்பத்து மூன்று ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை 23 சதவீதமாக இருந்தது ஆனால் இந்த அரசியல் மேலும் வேலைவாய்ப்பின்மை கடுமையாக அதிகரித்துள்ளது என்றும் நாட்டின் இந்திய பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை உணவுக்கு உத்தரவாதம் இல்லை உணவு பாதுகாப்பு என்ற பெயரில் தலித் மக்கள் சிறுபான்மையினர் தாக்கப்பட்டு வருகின்றனர் மேலும் பொது மக்களின் வருமானம் மோசமான நிலையில் உள்ளது என்றும் கிராமப்புறங்களில் ஒரு மாத தனிமனித வருமானம் 1200 ஆகவும் நகர்ப் புறங்களில் 2,900 உள்ளதால் மக்கள் கடும் அவதி பட்டு வருகின்றன எந்த ஒரு பொருளையும் வாங்கும் சக்தியை இழந்துள்ளனர் பணப்புழக்கம் அடியோடு குறைந்து உள்ளது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 42 சதவீதம் மட்டுமே அடிப்படை வசதிகளுக்காக கட்டமைப்புகளும் பயன்படுத்தப்படுகிறது மீதி சதவீதம் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படுகிறது ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை பல மேலை நாடுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் அங்கெல்லாம் கடுமையான தோல்வி அடைந்துள்ளது தமிழக அதிமுக அரசு மத்திய மோடி அரசின் அருமையாக உள்ளது மத்திய அரசும் மாநில அரசும் மத்திய அரசும் மாநில அரசும் எழுப்பும் அதுபோன்ற சூழ்நிலை இங்கு உள்ளது தமிழக அதிமுக அரசுக்கு என்று தனி செயல்பாடுகள் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.