ETV Bharat / state

கல்லூரி மாணவியை ஏமாற்றி 2வது திருமணம் - மாப்பிள்ளை கைது!

author img

By

Published : Sep 20, 2019, 7:47 AM IST

திருவள்ளூர்: ஏற்கனவே திருமணமாகி பத்து வயதில் மகன் உள்ள நிலையில், இளம்பெண்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிவமணி

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை;ச சேர்ந்தவர் சிவமணி(44). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயிலும் மாணவி சினேகா(19) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவி சினேகா காணாமல் போனதாக அவர் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சிவமணி சினேகாவைத் திருமணம் செய்து கொண்டு வேளாங்கண்ணியில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

கல்லூரி மாணவியை ஏமாற்றி 2வது திருமணம் செய்த நபர் கைது

இதனையடுத்து காவல்துறையினர் சிவமணி, மாணவி சினேகா ஆகிய இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி சிவமணியை கைது செய்தனர். திருமணமாகி 10 வயதில் மகன் உள்ள நிலையில் 44 வயதுடைய பைனான்சியர் 19 வயதுடைய இளம் பெண்ணை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை;ச சேர்ந்தவர் சிவமணி(44). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயிலும் மாணவி சினேகா(19) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவி சினேகா காணாமல் போனதாக அவர் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சிவமணி சினேகாவைத் திருமணம் செய்து கொண்டு வேளாங்கண்ணியில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

கல்லூரி மாணவியை ஏமாற்றி 2வது திருமணம் செய்த நபர் கைது

இதனையடுத்து காவல்துறையினர் சிவமணி, மாணவி சினேகா ஆகிய இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி சிவமணியை கைது செய்தனர். திருமணமாகி 10 வயதில் மகன் உள்ள நிலையில் 44 வயதுடைய பைனான்சியர் 19 வயதுடைய இளம் பெண்ணை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருவள்ளூர் / 19.09.19.

திருவள்ளூர் அருகே இளம்பெண்ணை ஏமாற்றி 2-ம் திருமணம் செய்தவர் கைது : ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் மகன் உள்ள நிலையில் மகளை கடத்தி திருமணம் செய்ததாக இளம் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை

Body:திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே இளம்பெண்ணை ஏமாற்றி 2-ம் திருமணம் செய்தவர் கைது : ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் மகன் உள்ள நிலையில் மகளை கடத்தி திருமணம் செய்ததாக இளம் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவமணி(44). பைனான்ஸ் தொழில் செய்து வரும் அவர் அதே பகுதியில் வசித்துவந்த தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவி சினேகா என்ற இளம் பெண்ணுடன் சிவமணிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாணவி சினேகா காணாமல் போனதாக திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சினேகாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பைனான்சியர் சிவமணி மாணவி சினேகாவை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வேளாங்கண்ணி பகுதியில் சிவமணி பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சிவமணியை கைது செய்தனர். இந்நிலையில் மாணவி சினேகாவின் கழுத்தில் சிவமணி தாலி கட்டி இருப்பதால் காவல்துறை அவர்கள் இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 10 வயதில் மகன் உள்ள நிலையில் 44 வயதுடைய பைனான்சியர் 19 வயதுடைய இளம் பெண்ணை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.